அமர்நாத் யாத்திரை நிறுத்தம்… பக்தர்கள் ஷாக்!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அமர்நாத் குகையில் உள்ள பனிலிங்கத்தை தரிசிக்க ஆண்டுதோறும் லட்சகணக்கான பக்தர்கள் செல்வது வழக்கம்.

கொரோனா காரணமாக கடந்த இரண்டாண்டுகளாக யாத்திரைக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படாத நிலையில், இந்த ஆண்டு கடந்த 30 ஆம் தேதி (ஜூன் 30) முதல் அமர்நாத் யாத்திரை மீண்டும் தொடங்கியது.

ஆகஸ்ட்11 ஆம் தேதி வரை இந்த யாத்திரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பனிலிங்கத்தைத் தரிசித்து வந்து கொண்டிருந்தனர். இரு தினங்களுக்கு முன் மோசமான வானிலை காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த யாத்திரை, வானிலை சீரானதும் மீண்டும் தொடங்கியது.

இந்த நிலையில், அமர்நாத் யாத்திரை குகை அருகே இன்று திடீரென மேக வெடிப்பு ஏற்பட்டு பெரு வெள்ளமும் உண்டாகி உள்ளது. மேக வெடிப்பு காரணமாக கொட்டித் தீர்த்தது. இதனால் ஏற்பட்ட பெருவெள்ளத்தால், அந்த பகுதியில் யாத்திரீகர்களுக்காக அமைக்கப்பட்டிருந்த 20 க்கும் மேற்பட்ட முகாம்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன.

வெள்ளத்தில் சிக்கி 5 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. வெள்ளத்தில் சிக்கி காணாமல் போன யாத்ரிகர்களை தேடும் பணியில் பேரிடர் மீட்பு படையினர் தீவிரமாக இறங்கி உள்ளனர். மழை, வெள்ளம் காரணமாக அமர்நாத் யாத்திரை மீண்டும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.