ஒரே பள்ளியில் படிக்கும் 19 மாணவர்களுக்கு கொரோனா

தேனி:
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் ஒரே பள்ளியில் படிக்கும் 19 மாணவர்களுக்கு கொரோனா இருப்பது தெரிய வந்துள்ளது.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய பள்ளியில் 170 மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக சில மாணவர்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டது.

இதையடுத்து அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 12 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து பாதிப்புக்குள்ளான மாணவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.