கடந்த 7 நாட்களில் 89 ஆயிரம் பக்தர்கள் பனி லிங்க தரிசனம்

ஜம்மு:  இந்த ஆண்டுக்கான அமர்நாத் பனிலிங்க யாத்திரை கடந்த 30ம் தேதி தொடங்கியது. வருகின்ற ஆகஸ்ட் 11ம் தேதி முடிவடைகிறது. இதுவரை மொத்தம் 89 ஆயிரம் பக்தர்கள் பனிலிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர். இந்நிலையில் நேற்று 8வது குழுவினர் யாத்திரைக்கு புறப்பட்டனர். 5726 பக்தர்கள் அடங்கிய குழுவானது பக்வதி நகர் யாத்திரை நிவாசில் இருந்து 242 வாகனங்களில் புறப்பட்டுச்சென்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.