கர்நாடகத்தில் புதிதாக 1,053 பேருக்கு கொரோனா

பெங்களூரு: கர்நாடகத்தில் நேற்று 27 ஆயிரத்து 86 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டது. இதில் புதிதாக 1,053 பேருக்கு பாதிப்பு உறுதியாகி உள்ளது. அதிகபட்சமாக பெங்களூரு நகரில் 966 பேர் பாதிக்கப்பட்டனர்.

தட்சிண கன்னடாவில் 15 பேர், மைசூருவில் 10 பேர், கோலாரில் 8 பேர், ஹாசனில் 6 பேர், பல்லாரி, பெங்களூரு புறநகரில், சிக்கமகளூரு, உடுப்பியில் தலா 4 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். நேற்று உயிரிழப்பு இல்லை. இதுவரை 39 லட்சத்து 76 ஆயிரத்து 53 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 1,080 பேர் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். 6 ஆயிரத்து 454 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர்.


Related Tags :

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.