டிப்பர் லாரி மீது தனியார் பள்ளி வாகனம் மோதி விபத்து.! 3 மாணவர்கள் படுகாயம்.!

டிப்பர் லாரி மீது தனியார் பள்ளி வாகனம் மோதி விபத்தில் 3 மாணவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டம் மண்ணிவாக்கம் பகுதியில் டிப்பர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்பொழுது சாலையின் குறுக்கே மாடு ஒன்று வந்ததால் டிப்பர் லாரி ஓட்டுநர் திடீரென பிரேக் பிடித்தார்.

இந்நிலையில் பின்னால் வந்த பள்ளி வாகனம் ஒன்று டிப்பர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மூன்று மாணவர்கள் பலத்த காயம் அடைந்துள்ளனர்.

இதையடுத்து அப்பகுதியில் இருந்தவர்கள் காயம் அடைந்த மாணவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.