மதுரை பொன்மேனி பகுதியில் வீட்டில் தனியாக இருந்த 19 வயது அபர்ணா என்ற இளம் பெண், வீடு புகுந்து கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அண்மையில் அபர்ணாவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில், அபர்ணா கொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வெளியான முதல் கட்ட தகவலின் படி காதல் விவகாரத்தில், இளைஞர் ஹரிஹரன் என்பவர் வீடு புகுந்து அபர்ணாவை கழுத்தை அறுத்து கொலை செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது.