பொன்னியின் செல்வன் டீசர் வெளியானது… ட்விஸ்டை வெளிப்படுத்திவிட்டாரா மணிரத்னம் ?

கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாகக் கொண்டு மணிரத்னம் இயக்கி வரும் திரைப்படம் பொன்னியின் செல்வன்.

இதன் முதல் பாகம் செப்டம்பர் 30 ம் தேதி வெளியாகும் என்று அறிவித்துள்ளனர்.

விக்ரம், ஐஷ்வர்யா ராய், கார்த்தி, ஜெயம் ரவி, சரத்குமார், பார்த்திபன், த்ரிஷா உள்ளிட்டோர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

வரலாற்று புதினமான பொன்னியின் செல்வன் நாவல் 1955 ம் ஆண்டு வெளியானது நாவலாக ஏற்படுத்திய பிரம்மாண்டத்தை படத்திலும் கொண்டு வர மணிரத்னம் முயற்சி மேற்கொண்டு வருகிறார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய ஐந்து மொழிகளில் உருவாகிவரும் இந்தப் படத்தின் டீசர் இன்று வெளியானது.

பெரும் பொருட்செலவில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகி வருவது இந்த டீசர் உணர்த்தி உள்ளதை அடுத்து படத்தின் ரிலீசுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.