நாகர்கோவில் அருகே வாடகை கடையை காலி செய்ய மறுத்ததால், கடையை திறக்க முடியாத அளவிற்கு கடைக்கு முன், அதன் உரிமையாளர் பாரங்கற்களை குவித்து வைத்துள்ளார்.
நாகர்கோவில் மணிமேடை சந்திப்பு அருகே சங்கரநாராயணன் என்பவருக்கு சொந்தமான கட்டிடத்தில் பிரசாத், கண்ணன் ஆகியோர் மொபைல் கடை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் அந்த கட்டிடத்தை, சங்கரநாராயணன் வேறு ஒரு நபருக்கு விற்பனை செய்யவுள்ளதால், மொபைல் கடையை காலி செய்து தருமாறு கண்ணனிடம் கேட்டுள்ளார். இதற்கு கண்ணன் மறுத்ததால் இருதரப்பினர் இடையே பிரச்னை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.