Sri Lanka Financial Crisis: இலங்கை நிலைமை தான் எல்லாருக்கும்.. – ஐ.நா. வார்னிங்!

கொரோனா மற்றும் உக்ரைன் போரால் பாதிப்புகளை சந்தித்து வரும் நாடுகள், இலங்கை போன்று கடும் பொருளாதார நெருக்கடியை சந்திக்க நேரிடும் என ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது.

அண்டை நாடான இலங்கையில், கொரோனா ஊரடங்கு காரணமாக அந்நாட்டின் பொருளாதாரம் வரலாறு காணாத வீழ்ச்சியில் சென்றுள்ளது. சுற்றுலாத் துறையை மட்டுமே நம்பி இருக்கும் அந்நாட்டில் ஊரடங்கு பேரிடியாக அமைந்தது. இதனால், பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் சிலிண்டர் விலை, மளிகைப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிரடியாக உயர்ந்தன.

இந்நிலையில், இலங்கையின் நெருக்கடி நாம் அனைவருக்கும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என, ஐக்கிய நாடுகள் சபை வளர்ச்சி திட்டத்தின் நிர்வாகி
அச்சிம் ஸ்டெய்னர்
தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து உள்ளதாவது:

இலங்கையில் மக்கள் மிகுந்த சோகமான நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். இது போன்ற நெருக்கடியை ஒரு நாடு சந்திக்கும் போது அந்த நாட்டுக்கு பிற நாடுகள் உதவ முன்வர வேண்டும். பாதிக்கப்பட்டுள்ள நாடு நெருக்கடியில் இருந்து தானாகவே மீள வேண்டும் என்று எண்ணும் நாடுகள், தங்களுக்கும் இது போன்ற நெருக்கடி நேரக்கூடும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

BREAKING: ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே காலமானார்

இலங்கையின் இன்றைய நிலை ஏற்கனவே நெருக்கடியை சந்தித்து வரும் பல நாடுகளுக்கும் எச்சரிக்கை. ஒரு நாடு கடனை திருப்பிச் செலுத்தாவிட்டால், அதனால் இறக்குமதி செய்ய முடியாது. நாட்டின் பொருளாதாரத்திற்கு அத்தியாவசியமான பெட்ரோல், டீசல், மருந்துப் பொருட்கள் உள்ளிட்டவற்றை இறக்குமதி செய்ய முடியாமல் போனால் அந்ந நாட்டின் பொருளாதாரம் எவ்வாறு மீளும்?

இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

2021 ஆம் ஆண்டில் உலகளவில் பட்டினியால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 828 மில்லியனாக உயர்ந்துள்ளது. இது கொரோனா தொற்று பாதிப்பிற்கு பிறகு 150 மில்லியனாக உயர்ந்துள்ளது என்று ஐநா உணவு மற்றும் விவசாய அமைப்பின் புதிய ஆய்வில் தெரிவிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.