தனித் தமிழ்நாடு சாத்தியமே இல்லை: திருநாவுக்கரசர்

க. சண்முகவடிவேல்

Su. Thirunavukkarasar M.P Tamil News: திருச்சி கண்டோன்மெண்ட் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் வகுப்பறையில் மாணவ, மாணவிகள் பயன்படுத்தும் மேஜை உள்ளிட்ட நலத்திட்டங்களை வழங்கும் நிகழ்ச்சியில் திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது தெரிவித்ததாவது:-

அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் சம்பந்தப்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் இன்று ஆய்வில் ஈடுபட்டு வருகிறார்கள்.
தவறு செய்தால் கட்டாயமாக பலன் அனுபவிக்க வேண்டும். இல்லை என்றால் நிரபராதியாகலாம். உண்மையான தகவலோடு தவறு செய்திருந்தால் அவர்களை விட்டு விட முடியாது. ஆனால் மத்திய அரசு, மாநில அரசே ரைடே செய்யக்கூடாது என கூற முடியாது. எந்த உள்நோக்கு இல்லாமல் தவறு செய்பவர்கள் தண்டிப்பதை நாம் தடுக்க முடியாது.

திமுகவின் ஆக்சிஜனால் தான் காங்கிரஸ் செயல்பட்டு வருகிறது என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சமீபத்தில் தெரிவித்துள்ளார் என்ற கேள்விக்கு; அ.தி.மு.க. ஆக்சிஜனால் தான் பா.ஜ.க. செயல்பட்டு வருகிறது என்பதை முதலில் அவர் ஒப்புக்கொண்ட பிறகு மற்றவர்களை விமர்சனம் செய்யலாம் என கூறினார்.

தமிழ்நாட்டை தனித் தமிழ் நாடாக பிரிப்பது சாத்தியமில்லை, அது இந்தியாவின் ஒற்றுமையை பலவீனப்படுத்தும். இளையராஜாவிற்கு எம்.பி. பதவி கொடுத்ததற்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் தொடர்ந்து மக்கள் பாதிப்பு அடைந்து வருகிறார்கள் எனத் தெரிவித்தார்.

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.