உயர்கல்வி கவுன்சிலிங்: புதுச்சேரியில் தேதி அறிவிப்பு| Dinamalar

புதுச்சேரியில், இளநிலை உயர் படிப்பிற்கான சென்டாக் கவுன்சிலிங்கிற்கு, வரும் 20ம் தேதி மாலை வரை விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் கூறியதாவது: புதுச்சேரி அரசின், உயர் மற்றும் தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் சார்பில், ‘நீட்’ அல்லாத பிற இளநிலை உயர் படிப்புகளுக்கு விண்ணப்ப பதிவு துவங்கியது. வரும் 20ம் தேதி மாலை 5:00 மணிவரை, மையப்படுத்தப்பட்ட சேர்க்கைக் குழுவிற்கு (சென்டாக்) விண்ணப்பிக்கலாம்.

இதில், நீட் அல்லாத இளநிலை தொழிற்முறை படிப்புகளில் 4,954 இடங்கள், கலை அறிவியல் படிப்புகளில் 4,260, இளநிலை நுண்கலை பிரிவில் 90, லேட்ரல் என்ட்ரி பிரிவில் 403, உயிரியல் சார்ந்த பட்டய படிப்பு பிரிவில் 190 என மொத்தம் 10 ஆயிரத்து 804 இடங்கள் சென்டாக் மூலம் நிரப்பப்பட உள்ளது. விண்ணப்பங்களை www.centacpuducherry.in என்ற இணையதளத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு, அமைச்சர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.