பாலக்காடு மாவட்டத்துக்குள் நுழையும் தமிழக பதிவெண் கொண்ட இருசக்கர வாகனங்களில், இன்சூரன்ஸ் காலாவதியாகி இருப்பது தெரியவந்துள்ளது.
சாலை போக்குவரத்து துறையின் அமலாக்கப் பிரிவு துணை அதிகாரி தேவிதாசன் கூறியதாவது: சமீப காலமாக நடத்தப்பட்ட வாகன சோதனையில், பாலக்காடு மாவட்டத்துக்குள் நுழையும் தமிழக பதிவெண் கொண்ட இரு சக்கர வாகனங்களில், 10க்கு 8ல், இன்சூரன்ஸ் புதுப்பிக்காமல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு, 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது.
பாலக்காடு நகர் உட்பட முக்கிய சாலைகளில், 47க்கும் மேற்பட்ட செயற்கை நுண்ணறிவு கேமராக்கள் விரைவில் பொருத்தப்பட உள்ளன. தேசிய நெடுஞ்சாலை உட்பட மாவட்ட முக்கிய பாதைகளில் வேகக் கட்டுப்பாடு கேமராவும் பொருத்தப்பட்டுள்ளன.கோவை- – கொச்சி தேசிய நெடுஞ்சாலையில் வாளையார் முதல் வடக்கஞ்சேரி வரை பொருத்தப்பட்டுள்ள, 37 கேமராக்களில் மட்டும், தினசரி ஏராளமான வாகனங்கள் விதிமீறி செல்லும் காட்சிகள் பதிவாகின்றன. இது போன்ற சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement