திசை மாறி வந்த காரை நிறுத்த முயன்ற காவலருக்கு நேர்ந்த விபரீதம்.. கார் பானட்டில் வைத்து காவலரை 500மீ தூரம் இழுத்துச் சென்ற வாகனஓட்டி

மகாராஷ்ட்ரா, நவி மும்பையில் தவறான திசையில் வந்த காரை நிறுத்த முயன்ற போக்குவரத்து காவலரை முட்டித் தள்ளி, கார் பானட்டில் வைத்து அரை கிலோ மீட்டர் தூரம் இழுத்துச் சென்ற ஓட்டுநரை போலீசார் மடக்கிப் பிடித்தனர்.

கோப்ரா மேம்பாலத்தில் தவறான திசையில் வந்த காரை போக்குவரத்து காவலர் நிறுத்த முயன்றார். கார் வேகமாக வந்த நிலையில் பானட்டில் தொற்றிக் கொண்ட காவலர் 500 மீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டார்.

மற்றொரு வாகனம் மூலம் காரை மடக்கிப் பிடித்த போலீசார் வாகன ஓட்டி மீது கொலை முயற்சி வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.