திருப்பதியில் தரிசனம் ரத்து – ஏழுமலையான் பக்தர்கள் ஷாக்!

திருப்பதியில் ஏழுமலையான் தரிசனம் வரும் 12 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 5 மணி நேரம் ரத்து செய்யப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ளது, திருப்பதி
ஏழுமலையான் கோவில்
. இந்தக் கோவில், உலகப் பிரசித்திப் பெற்றது. இக்கோவிலுக்கு, உள்ளூரில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும், வெளி நாடுகளில் இருந்தும் லட்சக் கணக்கான பக்தர்கள் வந்துச் செல்வர். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, திருப்பதி ஏழுமலையான் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதை அடுத்து, கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து, கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அளிக்கப்பட்டன.

திருமலையில் ஆண்டுக்கு 4 முறை கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம் நடத்தப்படுவது வழக்கம். தெலுங்கு வருடப் பிறப்பு, ஆனிவார ஆஸ்தானம், வருடாந்திர பிரம்மோற்சவம், வைகுண்ட ஏகாதசி உள்ளிட்ட நான்கு உற்சவங்களுக்கு முன்பு வரும் செவ்வாய்க்கிழமைகளில் கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம் நடத்தப்பட்டு வருகிறது. கோயில் ஆழ்வாா் திருமஞ்சனத்தின் போது ஏழுமலையான் கோயில் முழுவதும் கருவறை முதல் வெளிவாயில் வரை சுத்தப்படுத்தப்படும்.

அதன்படி, வரும் ஜூலை 16 ஆம் தேதி ஆனி மாத இறுதி நாள் ஆனிவார ஆஸ்தானம் என்னும் ஆண்டு கணக்கு சமா்ப்பிக்கும் நாளை முன்னிட்டு, ஜூலை 12 ஆம் தேதி கோயில் முழுவதும் சுத்தப்படுத்தப்பட உள்ளது. எனவே, அன்று காலை 6 முதல் மதியம் 11 மணி வரை ஏழுமலையான் தரிசனம் ரத்து செய்யப்பட்டு உள்ளது. 11 மணிக்கு மேல் பக்தா்கள் ஏழுமலையானைத் தரிசிக்க அனுமதிக்கப்படுவா். தா்ம தரிசன பக்தா்கள் இதை கவனத்தில் கொள்ள வேண்டும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.