பாகல்கோட், விஜயபுராவில் நில அதிர்வு| Dinamalar

பெங்களூரு : குடகு, தட்சிண கன்னடாவை அடுத்து, பாகல்கோட், விஜயபுராவில் நேற்று நில அதிர்வு உணரப்பட்டது.குடகு, தட்சிண கன்னடாவில், ஜூன் 25ம் தேதி முதல் ஒரு வாரத்தில், ஆறு முறை நில அதிர்வு ஏற்பட்டது. இது குறித்து ஆய்வு செய்ய ஹைதராபாதிலிருந்து நில அதிர்வு நிபுணர்கள் வருகை தந்தனர்.

இந்நிலையில், மஹாராஷ்டிரா மாநிலம் சங்கிலியில் நேற்று காலை 6:22 மணியளவில் பூமிக்கடியில் 10 கி.மீ., ஆழத்தில் நில அதிர்வு ஏற்பட்டது. இதன் தாக்கம், விஜயபுராவின் பசவனபாகேவாடி, இன்டி, பாபலேஸ்வர்; பாகல்கோட்டின் ஜம்கண்டியில் உள்ள சில கிராமங்களிலும் உணர முடிந்தது.நில அதிர்வை உணர்ந்த மக்கள், மாவட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அதிகாரிகள் அங்கு விரைந்துள்ளனர்.கடந்த இரண்டு ஆண்டுகளில் 18 வது முறையாக, விஜயபுராவில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.