பாகிஸ்தானில் பெய்துவரும் அடைமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 59 பேர் உயிரிழந்துள்ளனர்.
பாகிஸ்தானில் கடந்த சில நாட்களாக அடைமழை பெய்து வருகிறது. அந்நாட்டின் பலூஜிஸ்தான், கைபர் பக்துவா ஆகிய மாகாணங்களில் மழை பெய்துள்ளது. கனமழை காரணமாக 8 அணைகள் உடைப்பெடுத்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பல நகரங்களில் வெள்ள நீர் புகுந்துள்ளது.
வெள்ளப்பெருக்கு காரணமாக பல வீதிகள் துண்டிக்கப்பட்டு நூற்றுக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளன. வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் அனர்த்த மீட்புக்குழுவினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.