மழை பிடிக்காத மனிதனுக்கு டப்பிங் பேசிய நகுல்

விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்துள்ள படம் மழை பிடிக்காத மனிதன். இந்த படத்தில் நடிகர் சரத்குமார் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்கள் தவிர இன்னொரு முக்கியமான கதாபாத்திரத்தில் கன்னட நடிகர் பிருத்வி அம்பார் நடித்துள்ளார். இவர் படம் முழுவதும் விஜய் ஆண்டனியுடன் இணைந்து பயணிக்கும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். விஜய் ஆண்டனியின் கதாபாத்திரம் படத்தில் பேசும் வசனங்கள் வெறும் இரண்டு பக்கத்தில் அடங்கிவிடும் என்று கூறியுள்ள விஜய் மில்டன் அவருக்கும் சேர்த்து படத்தில் வளவள என பேசும் கதாபாத்திரத்தில் பிருத்வி அம்பார் நடித்துள்ளார் என்று கூறியுள்ளார்.

மேலும் தனது கதாபாத்திரத்திற்கு தானே தமிழில் டப்பிங் பேச பிருத்வி அம்பார் முயற்சித்தாராம். ஆனால் அது சரியாக அமையவில்லை என்பதால் அவருக்கு பதிலாக நடிகர் நகுலை அழைத்து அந்த கதாபாத்திரத்திற்கு டப்பிங் பேச வைத்துள்ளார் விஜய் மில்டன். இதில் ஆச்சரியம் என்னவென்றால் முதலில் அந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு நகுலை தான் தனது மனதில் நினைத்து வைத்திருந்தேன் என்று கூறியுள்ளார் விஜய் மில்டன்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.