மும்பையில் கல்லூரி மாணவர் கொலை.. இன்ஸ்டாகிராம் செயலி மூலம் 8 மணி நேரத்திற்குள் கொலையாளிகளை கைது செய்த போலீசார்.!

மகாராஷ்டிராவின் மும்பையில் கல்லூரி மாணவர் கொலை வழக்கில், இன்ஸ்டாகிராம் செயலி மூலம் 8 மணி நேரத்திற்குள் கொலையாளிகளை போலீசார் கைது செய்தனர்.

விஷால் என்ற இளைஞர் போவாய் பகுதியில் சென்றபோது 2 பேர் அவரை கத்தியால் சரமாரியாக தாக்கி கொலை செய்துவிட்டு தப்பியோடினர்.

இந்நிலையில், விஷாலின் இன்ஸ்டாகிராம் கணக்கில், நண்பர்கள் பட்டியலில் இருந்த அவரது நெருங்கிய நண்பரான அல்தாபை தொடர்பு கொண்டு விசாரித்த போலீசார், உயிரிழந்தவருக்கு அஜய், அனில் ஆகியோருடன் முன்விரோதம் இருந்ததை கண்டறிந்தனர்.

அந்த இருவரிடமும் பெற்ற ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் போலீசார் அவர்களை கைது செய்தனர்.

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.