ராஜபக்ச கேட்டுக் கொண்டால்…இந்திய ராணுவம் களமிறங்கும்: பிரபல தலைவர் கருத்து!


இலங்கையின் ராஜபக்சேவுக்கு இந்தியாவின் ராணுவ உதவி வேண்டுமானால் நாங்கள்(இந்தியா) கொடுக்க வேண்டும் என இந்தியாவின் மூத்த அரசியல் தலைவர் சுப்பிரமணிய சுவாமி கருத்து தெரிவித்துள்ளார்.

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து, அந்த நாட்டின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் உடனடியாக பதவி விலக வேண்டும் என லட்சக்கணக்கான இலங்கை மக்கள் போராட்டத்தில் குதித்தனர்.

இதனைத் தொடர்ந்து இலங்கையின் காலிமுகத் திடலில் ஜூலை 9ம் திகதியான சனிக்கிழமை காலை தொடங்கிய மக்கள் போராட்டம், ஜனாதிபதி இல்லத்தை முற்றுகையிட்டு அதனை ஆக்கிரமிக்கும் அளவிற்கு பெரிதானது.

மேலும் பிரதமர் ரணில் விக்கிர்மசிங்க-வின் ஆதிகாரப்பூர்வ இல்லமும் ஆர்ப்பாட்டக்காரர்களால் தீ வைத்து கொளுத்தப்பட்டது.

இலங்கையின் மக்களின் இந்த செயலுக்கு ஒருபுறம் ஆதரவும் எதிர்ப்பும் உருவாகி வரும் நிலையில், ராஜபக்ச இந்திய ராணுவத்தின் ஆதரவை கோரினால் அதனை நிச்சியாமாக இந்தியா வழங்க வேண்டும் என அந்த நாட்டின் மூத்த அரசியல் தலைவர் சுப்பிரமணிய சுவாமி கருத்து தெரிவித்துள்ளார்.

இதுத் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டில்,கோட்டாபய மற்றும் மகிந்த ராஜபக்ச ஆகிய இருவரும் அறுதிப் பெரும்பான்மையுடன் சுதந்திரமான தேர்தலில் தேர்வு செய்யப்பட்டனர்.

ராஜபக்ச கேட்டுக் கொண்டால்...இந்திய ராணுவம் களமிறங்கும்: பிரபல தலைவர் கருத்து! | If Rajapaksha Ask Help Indian Army Comes Srilanka

இத்தகைய சட்டபூர்வமான தேர்தலை ஒரு கும்பல் கவிழ்க்க இந்தியா எப்படி அனுமதிக்கும்? என கேள்வி எழுப்பியுள்ளார்.

கூடுதல் செய்திகளுக்கு: மூன்றாவது டி20 போட்டி..இங்கிலாந்து அணி திரில் வெற்றி: கோப்பையை கைப்பற்றியது இந்தியா!

அத்துடன், நமது நாட்டின் சுற்றுப்புறத்தில் உள்ள எந்த ஒரு ஜனநாயக நாடும் பாதுகாப்பாக இருக்காது. ஒருவேளை ராஜபக்சேவுக்கு இந்தியாவின் ராணுவ உதவி வேண்டுமானால் நாங்கள்(இந்தியா) கொடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.