ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் சன்னதியில் முறையான வழிகாட்டுதல் இல்லாததால் பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி கடும் அவதியடைந்தனர். மேலும் சிறப்பு தரிசன டிக்கெட் எடுத்த பக்தர்கள் பொது தரிசன வரிசையிலும் பொது தரிசனம் செல்லும் பக்தர்கள் சிறப்பு தரிசன வழியில் குவிந்து நின்றனர். சன்னதி பிரகாரத்தில் முதியவர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி மிகுந்த சிரமத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர்.