திருநெல்வேலி || அதிவேக பயணம்.. பள்ளத்தில் கவிழ்ந்த கார்.. ஒருவர் பரிதாப பலி..!

பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்தில் ஹோட்டல் உரிமையாளர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம், அம்பையில் தனியார் ஹோட்டல் நடத்தி வருபவர் பீர்முகமது ஹக்கீம். இவர் நேற்று பக்ரீத் பண்டிகைக்காக பக்ரீத் தினத்தை முன்னிட்டு தனது நண்பர்கள் மற்றும் சகோதரர்கள் சிவா(29),கோபி (24) மற்றும் ராஜேஷ் (28) ஆகியோருடன் சென்று கொண்டிருந்தனர்.  அப்போது கார் அதிவேகமாக சென்று கொண்டிருந்தது.  அப்போது கார் கட்டுபாட்டை இழந்து சாலையோரத்தில்  இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது.

இந்த விபத்திலேயே பீர்முகமது பரிதாபமாக உயிரிழந்தார். உடனிருந்தவர்கள் படுகாயமடைந்தனர். இந்த விபத்து குறித்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதிவேக பயணத்தால் அதிக விபத்துக்கள் ஏற்படுவதுவதாகவும் அதனை தவிர்க்க அதிவேகமாக செல்வதை தவிர்க்க வேண்டும் என தெரிவித்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.