இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் இந்திய அணி வெற்றி..!

இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. 

ஆரம்பம் முதலே இந்திய அணியினர் அசத்தலாக பந்து வீசினர். தொடக்க ஆட்டக்காரரான ஜேசன் ராய், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், லிவிங்ஸ்டோன் ஆகியோர் டக் அவுட்டாகினர்.

இறுதியில், இங்கிலாந்து அணி 110 ரன்னுக்கு ஆட்டம் இழந்தது. இந்தியா சார்பில் பும்ரா 6 விக்கெட்டும், ஷமி 3 விக்கெட்டுகளையும், பிரசித் கிருஷ்ணா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

பின்னர் ஆடிய இந்திய அணி விக்கெட் இழப்பு ஏதும் இன்றி, 18.4 ஓவர்களின் இலக்கை எட்டிப்பிடித்து வெற்றி பெற்றது. 3 போட்டிகளை கொண்ட தொடரில், இந்திய அணி முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.