
இந்தியன்- 2 படப்பிடிப்பு முடிந்ததும் தனது கனவு படத்தை இயக்கும் ஷங்கர்!
தற்போது ராம்சரனின் 15வது படத்தை இயக்கி வருகிறார் ஷங்கர். கியாரா அத்வானி, அஞ்சலி உட்பட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கும் இந்த படத்திற்கு தமன் இசை அமைக்கிறார். வழக்கம்போல் இந்த படத்தையும் பிரமாண்டமான பட்ஜெட்டில் இயக்கி வருகிறார் ஷங்கர். இப்படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாகிறது. இந்த நிலையில், தற்போது ராம்சரண் படத்தை அடுத்து இந்தியன் 2 படத்தை மீண்டும் தொடங்கும் ஷங்கர், அந்த படத்தை முடித்ததும் தனது கனவு படத்தை சுமார் 1000 கோடி பட்ஜெட்டில் இயக்க இருப்பதாக புதிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. இந்த படம் தண்ணீருக்கு அடியில் அறிவியல் கலந்த ஒரு கதையில் உருவாகிறது. மேலும் சர்வதேச தரத்தில் உருவாகும் அந்தப் படத்தில் ஹிந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷன் மற்றும் தெலுங்கு நடிகர் ராம்சரண் ஆகிய இருவரும் இணைந்து நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.