ஒரே ஆட்டோவில் 27 பேர் பயணம்; அதிர்ச்சியடைந்த உ.பி போலீஸ்! | Viral Video

இந்தியாவில், ஒரே வாகனத்தில் பலர் பயணிப்பதைப் பார்ப்பது வாடிக்கையான ஒன்றுதான். இருப்பினும், சமீபத்தில் 5 அல்ல 6 அல்ல, ஒரே ஆட்டோவில் 27 பயணிகளை ஏற்றிச் சென்ற ஆட்டோவைக் கண்டு, உத்தரப் பிரதேச போலீஸார் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள ஃபதேபூர் மாவட்டத்தில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் அதிவேகமாக ஆட்டோவை ஓட்டிச் சென்றதைக் கண்டு போலீஸார் அவரை நிறுத்தச் சொன்னபோது உள்ளே வரம்பு மீறி அதிகமான பயணிகள் அமர்ந்திருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். ​​போலீஸார் ஒவ்வொருவராக எண்ணியப்பொழுது திகைத்துப் போயினர். ஒரே ஆட்டோவில் 27 பேரை வைத்து வண்டியை ஓட்டி இருந்திருக்கிறார் ஆட்டோ ஓட்டுநர். ஒரு அங்குலம் கூட நகர முடியாமல், பயணிகள் உள்ளே அமர்ந்து இருகின்றனர். இதில் சில குழந்தைகளும் அடக்கம்.

இந்த வீடியோவை நெட்டிசன்கள் பலரும் பகிர்ந்து வருகின்றனர். பலர் இதை மீம் கன்டென்ட ஆக்கினாலும், சிலர் சமூக அக்கறையுடன் இப்படியான ஆபத்தான பயணங்களைச் செய்யும் ஆட்டோ ஓட்டுநர்கள் மீது கடுமையான தண்டனை எடுக்கவேண்டும் என்று பகிர்ந்து வருகின்றனர்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.