குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பிராந்திய அலுவலகங்களில் இருந்து ஒரு நாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டு வழங்கும் நடவடிக்கை குருநாகல் அலுவலகத்திலும் ஆரம்பமானது.
அதன்படி, முன்கூட்டியே திகதி மற்றும் நேரத்தை முன்பதிவு செய்த விண்ணப்பதாரர்களுக்கு மாத்திரம் கடவுச்சீட்டு வழங்கப்படுகிறது.
மாத்தறை, வவுனியா, கண்டி மற்றும் குருநாகல் பிராந்திய அலுவலகங்களில் இருந்து ஒரு நாள் மற்றும் சாதாரண சேவைகளின் கீழ் திகதி மற்றும் நேரத்தை முன்பதிவு செய்த விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே கடவுச்சீட்டு வழங்கப்படும் என்று குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்வையிடுவதன் மூலம் திகதி மற்றும் நேரத்தை முன்பதிவு செய்து கொள்ள முடியும் என்றும் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.