ஷிவமொகா : பத்ராவதியில் நகைக்கடைக்குள் நுழைந்த மர்ம கும்பல், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள தங்கம், வெள்ளிப்பொருட்களை திருடி, கண்காணிப்பு கேமராவுடன் தப்பியோடியது.ஷிவமொகா பத்ராவதியின், ஹளேநகரின் சென்னகிரி சாலையில், விக்ரம் மற்றும் விஜய் என்ற சகோதரர்களுக்கு சொந்தமான, எஸ்.எஸ்.ஜூவல்லர்ஸ்’ என்ற நகைக்கடை உள்ளது.
நேற்று முன்தினம் அதிகாலை, மர்ம நபர்கள் சுவற்றில் துளை போட்டு உள்ளே நுழைந்தனர். மேலும், 1.25 கிலோ தங்க நகைகள், 50 கிலோ எடையுள்ள வெள்ளிப் பொருட்களை திருடிக் கொண்டு, கண்காணிப்பு கேமராக்கள், மற்றும் உபகரணங்களை எடுத்துக்கொண்டு தப்பியோடினர்.தங்க நகைகள் வைக்கப்பட்டிருந்த பீரோக்களின் பூட்டை உடைக்க, காஸ் கட்டர், பெரிய கம்பிகளை திருடர்கள் பயன்படுத்தினர். இவற்றை அங்கேயே போட்டு சென்றுள்ளனர்.ஹளேநகர் போலீசார் விசாரிக்கின்றனர்.
ஷிவமொகா : பத்ராவதியில் நகைக்கடைக்குள் நுழைந்த மர்ம கும்பல், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள தங்கம், வெள்ளிப்பொருட்களை திருடி, கண்காணிப்பு கேமராவுடன் தப்பியோடியது.ஷிவமொகா
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்