கடை சுவரில் துளை போட்டு 1.25 கிலோ நகை கொள்ளை| Dinamalar

ஷிவமொகா : பத்ராவதியில் நகைக்கடைக்குள் நுழைந்த மர்ம கும்பல், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள தங்கம், வெள்ளிப்பொருட்களை திருடி, கண்காணிப்பு கேமராவுடன் தப்பியோடியது.ஷிவமொகா பத்ராவதியின், ஹளேநகரின் சென்னகிரி சாலையில், விக்ரம் மற்றும் விஜய் என்ற சகோதரர்களுக்கு சொந்தமான, எஸ்.எஸ்.ஜூவல்லர்ஸ்’ என்ற நகைக்கடை உள்ளது.

நேற்று முன்தினம் அதிகாலை, மர்ம நபர்கள் சுவற்றில் துளை போட்டு உள்ளே நுழைந்தனர். மேலும், 1.25 கிலோ தங்க நகைகள், 50 கிலோ எடையுள்ள வெள்ளிப் பொருட்களை திருடிக் கொண்டு, கண்காணிப்பு கேமராக்கள், மற்றும் உபகரணங்களை எடுத்துக்கொண்டு தப்பியோடினர்.தங்க நகைகள் வைக்கப்பட்டிருந்த பீரோக்களின் பூட்டை உடைக்க, காஸ் கட்டர், பெரிய கம்பிகளை திருடர்கள் பயன்படுத்தினர். இவற்றை அங்கேயே போட்டு சென்றுள்ளனர்.ஹளேநகர் போலீசார் விசாரிக்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.