குஜராத்தில் வெள்ளத்தால் பல நூறு கிராமங்கள் நீரில் மூழ்கின.. கடந்த ஒன்றரை மாதங்களில் மின்னல் தாக்கி 63 பேர் உயிரிழப்பு..!

மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள குஜராத் மாநிலத்துக்குத் தேவையான அனைத்து உதவிகளும் அளிக்கப்படும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதியளித்துள்ளார்.

குஜராத் முதலமைச்சர் பூபேந்திர பட்டேலுடன் தொலைபேசியில் பேசிய அமித் ஷா வெள்ள நிலவரம் குறித்து கேட்டறிந்தார்.முன்னதாக பிரதமர் மோடியும் குஜராத் முதலமைச்சரிடம் அனைத்து உதவிகளும் அளிக்கப்படும் என்று உறுதியளித்திருந்தார்.

தேசியப் பேரிடர் மீட்ப்படை வீரர்கள் நிவாரணப்பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.நூற்றுக்கணக்கான கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
breathe
8 மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு காரணமாக சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. பூர்ணா மற்றும் அம்பிகா நதிகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

கடந்த ஒன்றரை மாதங்களில் மழை மற்றும் மின்னல் தாக்கி 63 பேர் உயிரிழந்ததாக மாநிலப் பேரிடர் முகமை அறிவித்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.