தூங்கிக் கொண்டிருந்த கணவன் மீது தீ வைத்த மனைவி.. போலீசார் அதிரடி நடவடிக்கை.!

குடும்ப தகராறில் கணவர் மீது தீ வைத்த மனைவியை போலீசார் கைது செய்தனர்.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரை ஜீவா நகரில் லிங்கநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அங்கயற்கண்ணி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகள் இருக்கிறார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

இதில் கோபமடைந்த அங்கயற்கண்ணி தூங்கிக் கொண்டிருந்த போது தன் மீது தீ வைத்ததாக லிங்கநாதன் அக்கம் பக்கத்தினரிடம் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து காயமடைந்த லிங்கநாதன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இது குறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் அங்கயற்கண்ணியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.