நாசா வெளியிட்ட ஆச்சரியப்பட வைக்கும் பிரபஞ்சத்தின் புகைப்படம்!

அமெரிக்காவைச் சேர்ந்த விண்வெளி நிறுவனமான நாசா, ஐரோப்பா மற்றும் கனடாவின் விண்வெளி ஆய்வு அமைப்புகளுடன் இணைந்து ஜேம்ஸ் வெப் என்ற விண்வெளி தொலைநோக்கியை உருவாக்கியது. சுமார் ரூ.75,000 கோடிக்கும் அதிகமான மிகப்பெரிய பட்ஜெட்டுடன் உருவாக்கப்பட்ட இந்த தொலைநோக்கி பிரெஞ்ச் கயானாவில் உள்ள ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து ஏரியன் 5 ராக்கெட் மூலம் கடந்த ஆண்டு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டு, பூமியிலிருந்து 10 லட்சம் மைல்கள் தொலைவில் நிலைநிறுத்தப்பட்டது.

பிரபஞ்சத்தின் முதல் நட்சத்திரத்தை கண்டுபிடிக்கும் சக்திகொண்ட இந்த தொலைநோக்கி, நாம் அறிந்திராத பல அரிய தகவல்களை அளிக்கும் என தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி, பிரபஞ்சத்தை படம்பிடித்து அனுப்பியுள்ளது. இதன் முதலாவது வண்ணப் புகைப்படத்தை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெளியிட்டுள்ளார்.

ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி மூலம் எடுக்கப்பட்ட படங்களின் தொகுப்பு விரைவில் வெளியிடப்படும் என தெரிகிறது. மனித கண்களுக்குப் புலனாகாத பகுதிகளையும் கதிர்வீச்சு ஊடுருவல் முறையில் படம்பிடித்து ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி அனுப்பியுள்ளது. விண்வெளியில் இதுவரை எடுக்கப்பட்ட படங்களில் இதுதான் மிகத்தெளிவான படம் என நாசா பெருமிதம் தெரிவித்துள்ளது.

மக்கள் தொகையில் சீனாவை விஞ்சும் இந்தியா – ஐ.நா., கணிப்பு!

நாசா வெளியிட்ட புகைப்படத்தில், ஆயிரக்கணக்கான பால்வெளி மண்டலங்கள் (galaxies) உள்ளன. சூரிய ஒளியானது பூமியை வந்தடைய தோராயமாக எட்டு நிமிடங்கள் ஆகின்றன. அதன்படி, நாசா வெளியிட்டுள்ள புகைப்படத்தின் பிரகாசமாக மின்னும் நட்சத்திரத்தின் ஒளி கிட்டத்தட்ட 13 பில்லியன் ஒளியாண்டுகளைக் கடந்துவந்து தொலைநோக்கியை அடைந்திருக்கிறது எனக் கணக்கிட்டுள்ளனர். மேலும், அப்படத்தில் தெரிகிற நட்சத்திரக் கொத்தின் (clusters) வயது நான்கரை பில்லியன் ஆண்டுகள் எனக் கணக்கிட்டுள்ளனர்.

இந்த பிரபஞ்சம் உருவானதே 13.8 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்புதான் என்று கூறப்படும் நிலையில், இன்னும் முன்னேறிச் சென்று அண்டத்தின் பழமையான கிளஸ்டர்ஸைக் கண்டறிவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. பிக் பாங்க் தியரியின் அடுத்தக்கட்ட பாய்ச்சல் என்று விஞ்ஞான உலகம் இதனை கொண்டாடுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.