பாகிஸ்தானில் பெய்த தொடர் கனமழையால் 24 குழந்தைகள் உட்பட 62 பேர் உயிரிழப்பு..!

பாகிஸ்தானின் பலுசிஸ்தானில் தொடர்ந்து பெய்த கனமழையால் 24 குழந்தைகள் உட்பட 62 பேர் உயிரிழந்தனர்.

வெள்ளம் மற்றும் இடிபாடுகள் உள்ளிட்டவற்றில் சிக்கி 48 பேர் காயமடைந்திருப்பதாகவும், 670-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து சேதமடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று கராச்சியில் கனமழையால் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று காலையில் கொறங்கி, சடார், நிப்பா உள்ளிட்ட நகரின் பல பகுதிகளில் கனமழை பெய்தது.

சமீபத்திய பருவமழையால் 339 அடி கொள்ளளவு கொண்ட ஹப் அணையின் நீர் மட்டம் 334 அடியை எட்டியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.