மதுரை ஆதீனத்துக்குச் சொந்தமான கோயிலில் அறநிலையத்துறை நியமித்த செயல் அலுவலருக்கு நீதிமன்றம் இடைக்கால தடை

மதுரை: மதுரை ஆதீனத்துக்குச் சொந்தமான கஞ்சனூர் அக்னீஸ்வரர் கோயிலில், அறநிலையத்துறை சார்பில் நியமிக்கப்பட்ட, செயல் அலுவலர் நியமனத்துக்கு உயர் நீதிமன்றம் மதுரை கிளை இடைக்கால தடைவிதித்துள்ளது. விதிப்படி 3பேரை அறநிலையத்துறை ஆணையர் தேர்வு செய்து ஆதீனத்துக்குப் பரிந்துரை செய்யலாம் என உத்தர விட்டு வழக்கை தள்ளிவைத்தார்.

தமிழ்நாட்டில் வருவாய் வரும் பெரும்பாலான கோயில்களை தமிழகஅரசு கையப்படுத்தி அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளது. அதுபோல, தற்போது சிதம்பரம் நடராஜர் கோயிலை கையகப்படுத்த முயற்சித்து வருகிறது. மேலும் ஆதீனங்கள் தலைமையில் செயல்படும் கோயில்களையும் கட்டுப்படுத்த முனைந்துள்ளது. மேலும் கோயிலுக்கு சொந்தமான இடங்களில் அரசு அலுவலகங்கள் கட்டப்பட்டு வருகிறது. பல இடங்கள் ஆட்சியாளர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில்,  தமிழகஅரசுக்கு எதிராக செயல்படும் மதுரை ஆதீனத்துக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் ஆதீன  மடத்துக்கு சொந்தமான கோயிலில் விதிகளை மீறி செயல்அலுவலர்களை நியமித்து உள்ளது.

தமிழகஅரசின் நடவடிக்கையை எதிர்த்து மதுரை ஆதீனம் ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், உயர் நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடுத்தார். அவரது மனுவில்,  மதுரை ஆதீன மடத்தின் கீழ் தஞ்சை, திருவாரூர், கஞ்சனூர், திருப்புறம்பியம் ஆகிய இடங்களில் 4 கோயில்கள் உள்ளன.

விதிப்படி ஆதீனக் கோயில்களுக்குச் செயல் அலுவலரை நியமிக்க 3 நபர்களைத் தேர்வு செய்து ஆதீன மடத்துக்கு இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் பரிந்துரை செய்ய வேண்டும். அவர்களில் ஒருவரை செயல் அலுவலராக ஆதீனம் தேர்வு செய்வார்.

இந்த நடைமுறையைப் பின்பற்றாமல் கஞ்சனூர் அக்னீஸ்வரர் கோயிலுக்குச் செயல் அலுவலரை நியமித்து அறநிலையத் துறை இணை ஆணையர் 24.1.2022-ல் உத்தரவிட்டார். ஆதீனக் கோயில்களுக்குச் செயல் அலுவலரை அறநிலையத் துறை ஆணையர்தான் நியமிக்க வேண்டும். இதிலும் விதிமீறல் நடந்துள்ளது.

செயல் அலுவலராக நியமிக்கப்படுபவர் ஆதீனத்துக்கு தகவல் தெரிவித்துவிட்டுப் பணிகளைதொடங்க வேண்டும். ஆனால்,செயல் அலுவலராக நியமிக்கப்பட்ட கிருஷ்ணகுமார், தற்போது வரை ஆதீனத்தைச் சந்திக்கவில்லை. கஞ்சனூர் அக்னீஸ்வரர்கோயிலுக்குச் செயல் அலுவலரை நியமித்து இணைஆணையர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என கோரியிருந்தார்.

இந்த மனுமீதான நீதிபதி பி.புகழேந்தி  விசாரணை நடத்தினார் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, கஞ்சனூர் அக்னீஸ்வரர் கோயில் செயல் அலுவலராக கிருஷ்ணகுமார் நியமிக்கப்பட்டதற்கு இடைக்காலத்தடை விதிக்கப்படுவ தாக அறிவித்தார். மேலும், விதிப்படி விதிப்படி 3 பேரை அறநிலையத்துறை ஆணையர் தேர்வு செய்து ஆதீனத்துக்குப் பரிந்துரை செய்யலாம் என உத்தரவிட்டு வழக்கை தள்ளிவைத்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.