ரங்கனதிட்டு சரணாலயத்தில்படகு சவாரி நிறுத்தம்| Dinamalar

மாண்டியா : காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், ரங்கனதிட்டு பறவைகள் சரணாலயத்தில் படகு சவாரி நிறுத்தப்பட்டுள்ளது.மாண்டியா மாவட்டம், ஸ்ரீரங்கப்பட்டணாவில் இருந்து, 4 கி.மீ., தொலைவில் ரங்கனதிட்டு பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. காவிரி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள இந்த சரணாலயத்துக்கு, உள்நாட்டில் இருந்து மட்டுமின்றி

பல்வேறு வெளிநாடுகளில் இருந்தும் அரிய பறவைகள் வருவதுண்டு.இனப்பெருக்கம் முடிந்த பின், மீண்டும் சென்றுவிடும். ஆற்றின் குறுக்கே மரங்கள், பாறைகள் மீதும் பறவைகள் வசிக்கும். இதை காண்பதற்காக, தினமும் நுாற்றுக்கணக்கான சுற்றுலா பயணியர் வருவர்.படகு மூலம் ஆற்றில் அழைத்து செல்லப்படுவர். ஆனால், தற்போது காவிரி ஆற்றில் கடும் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளதால் படகு சவாரி நிறுத்தப்பட்டுள்ளது. படகுகள் அனைத்தும் கரையோரத்தில் கட்டப்பட்டுஉள்ளன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.