சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள 15 வயது சிறுமி வசித்து வருகிறார். இவருக்கு ஆன்லைன் விளையாட்டு மூலம் பாலா (வயது 24) என்ற இளைஞர் அறிமுகமானார். இந்நிலையில் விக்னேஷ் சிறுமியை காதலிப்பதாக கூறியுள்ளார்.
இதனையடுத்து சிறுமியை ஆபாசமாக வீடியோ காலில் பேச வற்புறுத்தி அதனை செல்போனில் பதிவு செய்துள்ளார். பின்னர் விக்னேஷ் அந்த வீடியோவை காட்டி சிறுமியை மிரட்டி அவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
இதனையடுத்து சிறுமி நடந்துவற்றை தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து விக்னேஷிடம் கேட்டதற்கு அவர் உங்களது மகளின் ஆபாச வீடியோக்கள் என்னிடம் இருக்கிறது. 50 லட்சம் ரூபாய் கொடுத்தால் அந்த வீடியோவை அழித்து விடுவேன். கொடுக்கவில்லை என்றால் வீடியோக்களை சமூக வலைதளத்தில் வெளியிடுவேன் என மிரட்டியுள்ளார்.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் விக்னேஷ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.