Fly Dubai நிறுவனத்தில் டிக்கெட் முன்பதிவு செய்த பயணிகளுக்கான அறிவித்தல்

டுபாய் மற்றும் கட்டுநாயக்க விமான நிலையங்களுக்கு இடையிலான Fly Dubai நிறுவனத்தின் விமானச் சேவை ஜூலை மாதம் 10ஆம் திகதி முதல் மறு அறிவித்தல் வரை   இடைநிறுத்தப்பட்டுள்ளது. .

இதுதொடர்பாக அறிக்கை ஒன்றை நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இலங்கையில் நிலவும் அரசியல் மற்றும் பொருளாதார அமைதியின்மை காரணமாக தனது விமானச் சேவைகளை இடைநிறுத்த Fly Dubai நிறுவனம் தீர்மானித்துள்ளது.

அத்துடன், விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்த பயணிகளுக்கு பணத்தைத் திருப்பித் தருவதாக விமான நிறுவனம் கூறியுள்ளதுடன், இலங்கையின் நிலைமையை நாங்கள் உன்னிப்பாக அவதானித்து வருகிறோம் என்றும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.