இலங்கையின் புதிய தற்காலிக அதிபராக ரணில் விக்கிரமசிங்கே அறிவிப்பு

கொழும்பு: இலங்கை  அதிபர் கோத்தபய ராஜபக்ச நாட்டை விட்டு  ஓடிய நிலையில், நிலையில் இலங்கை அரசியலமைப்பின் பிரகாரம் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தற்காலிக அதிபராக அறிவிக்கப்பட்டு உள்ளார். அதிபரின் கடமைகளை நிறைவேற்ற பிரதமர் ரணிலை அறிவித்துள்ளதாக சபாநாயகர் மகிந்த யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக அதிபர் மற்றும் பிரதமர் இருவரையும் பதவி விலகுமாறு  பொதுமக்கள் போராடி வருகின்றனர்.  கொழும்பின் பல பகுதிகளில் இன்று ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கடந்த 9ந்தேதி நடைபெற்ற  மக்கள் எழுச்சியை அடுத்து, கோத்தபய இன்று அதிகாலை மாலத்தீவு சென்று தஞ்சமடைந்தார்.

இந்த நிலையில், இலங்கை சபாநாயகர் மகிந்த யாபா அபேவர்தன, தற்காலிக அதிபராக நியமிக்கப்பட இருப்பதாக அறிவித்து உள்ளார். அதிபரின் கடமைகளை நிறைவேற்றுவதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை நியமித்துள்ளதாக சபாநாயகர் அறிவித்துள்ளார். விரைவில் அவர் தற்காலிக அதிபராக பொறுப்பேற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.