உலகம் முழுவதும் விமானப் பயணங்கள் முடங்கும் வாய்ப்புகள் அதிகம்

சர்வதேச அளவில் எரிபொருள் விலை உயர்வால், விமான டிக்கெட்டுக்களின் விலை கணிசமான அளவு உயர்வடையும் என்று சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கம் எச்சரித்துள்ளது.

உக்ரைன்-ரஷ்யா நெருக்கடி இன்னும் முடிவுக்கு வராமையும் இதற்கு ஒரு காரணம் என்று சங்கத்தின் பணிப்பாளர் நாயகம் விலீ வொல்ஷ் Willie Walsh  சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்னும் சில மாதங்களில் வடக்கு அரைக்கோளத்தில் குளிர்காலம் வருவதால், விமான டிக்கெட்டுக்களின் விலை கணிசமான அளவு உயர்வடையலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, உலகின் பல நாடுகளில் உள்ள விமான நிலையங்களில் அதிகளவான வி்மானப் பயணங்கள் இரத்து செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

போதியளவு எரிபொருளை கொள்வனவு செய்ய முடியாமையே இதற்கான காரணம் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.