எடப்பாடி பழனிசாமிக்கு குவியும் வாழ்த்துமழை.,! பிரபல கழகத்தின் தலைவர் வெளியிட்ட செய்தி.!

அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எடப்பாடி கே பழனிசாமிக்கு, கொங்குநாடு முன்னேற்ற கழகத்தின் நிறுவன தலைவர் ‘பெஸ்ட் ராமசாமி’ தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது அறிந்து மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். அவருக்கு மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன். 

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித்தலைவி ‘அம்மா’ ஆகியோர் வகித்த அந்தப் பதவி தங்களுக்கு கிடைத்துள்ளது. அவர்களைப் போலவே தாங்களும் பன்மடங்கு புகழ்பெற வேண்டும் என வாழ்த்துகிறேன். 

மேலும் கொங்குநாடு முன்னேற்ற கழகம் தங்களுக்கு என்றும் ஆதரவாகஇருக்கும் என்று அன்புடன் தெரிவித்துக் கொண்டு மீண்டும் வாழ்த்துக்களை எனது சார்பாகவும், கொங்குநாடு முன்னேற்ற கழகம் சார்பாகவும் தெரிவித்துக் கொள்கின்றேன்”  இவ்வாறு அந்த வாழ்த்துச்செய்தியில் பெஸ்ட் ராமசாமி தெரிவித்துள்ளார். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.