ஓ.பி.எஸ் நிலை, பா.ஜ.க.,வுக்கு பின்னடைவு அல்ல; பலமான அ.தி.மு.க.,வுக்கு குறி!

Liz Mathew 

Seen to be in OPS corner, BJP denies setback, says very much in the game with a ‘united, strong’ ADMK: அ.தி.மு.க.வில் ஏற்பட்ட பரபரப்பான மாற்றங்களான, கட்சியின் மிக சக்திவாய்ந்த மனிதராக எடப்பாடி இ.பழனிசாமி (இ.பி.எஸ்.) முடிசூடுவது, ஓ.பன்னீர்செல்வம் என்ற ஓ.பி.எஸ்-ஐ வெளியேற்றுவது, ஆகியவை பா.ஜ.க.வுக்கு பின்னடைவாகவே தோன்றலாம். இரு தலைவர்களுக்கும் இடையே நீண்ட காலமாக நிலவி வரும் அதிகார மோதலில் பா.ஜ.க ஓ.பி.எஸ் பக்கம் சாதகமாக இருந்தது. எவ்வாறாயினும், அ.தி.மு.க கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியவாறு, ஒற்றை தலைமை விவாதத்திற்குப் பிறகு ஒரு வலுவான, ஒன்றுபட்ட அ.தி.மு.க உருவாகலாம் என்பது பா.ஜ.க.,வுக்கு நல்ல செய்தி.

தமிழகத்தில் பா.ஜ.க காலூன்றுவதற்கான முயற்சிகளில் நெருக்கமாக ஈடுபட்டுள்ள மூத்த தலைவர்கள், ஓ.பி.எஸ்ஸுடன் பா.ஜ.க இணைந்திருப்பதால் குறுகிய கால பின்னடைவு ஏற்படலாம் என்று கூறுகின்றனர். அதேநேரம், அ.தி.மு.க, “ஒருங்கிணைந்த, ஒத்திசைவான மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட சக்தியாக… நீண்ட காலத்திற்கு பா.ஜ.க.,வுக்கு உதவும்” என்று ஒரு தலைவர் கூறினார்.

இதையும் படியுங்கள்: தமிழக உளவுப் பிரிவு ஏ.டி.ஜி.பி மீது சி.பி.ஐ விசாரணை: ஆளுனருக்கு அண்ணாமலை கடிதம்

மேலும், “தமிழ்நாடு போன்ற ஒரு மாநிலத்தில், களச்சூழல் பா.ஜ.க.,வுக்கு ஆதரவாக இல்லாத நிலையில், கிட்டத்தட்ட எல்லா மாநிலங்களிலும் நமது முக்கிய துருப்புச் சீட்டாக இருக்கும் பிரதமரின் (நரேந்திர மோடி) புகழ் அவ்வளவு ஆழமாக இல்லாத நிலையில், நமக்கு வலுவான நட்பு கட்சி இருக்க வேண்டும்,” என்று தலைவர் கூறினார், குறிப்பாக திமுக அதன் பா.ஜ.க எதிர்ப்பு பிரச்சாரத்தை அதிகரித்து காங்கிரஸுடன் நெருக்கமாக வளர்ந்து வரும் வேளையில் நட்பு கட்சியின் தேவை அதிகம்.

மேலும், மாநிலத்தில் பா.ஜ.க வாய்ப்புகள் இன்னும் பலவீனமாக உள்ள நிலையில், மாற்று கட்சியாக பா.ஜ.க உருவாவது ஒருபுறம் இருக்க, அ.தி.மு.க உடனான கூட்டணி தொடரும் என்று தலைவர் கூறினார். அந்த கூட்டணியின் ஒரு பகுதியாக முடிந்தவரை மக்களவை தொகுதிகளை வெல்வதே பா.ஜ.க.,வின் முதல் இலக்காக இருக்கும்.

அ.தி.மு.க.வை வலுப்படுத்தும் கடினமான பணியை கொண்டுள்ள இ.பி.எஸ், மத்தியில் பா.ஜ.க.வுடன் “நட்பு” பாராட்ட விரும்புவார் என்றும் பா.ஜ.க தலைவர்கள் மதிப்பிடுகின்றனர்.

இ.பி.எஸ் உடனான அதிகாரப் பகிர்வு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளரான ஓ.பி.எஸ், இந்த வார தொடக்கத்தில் அவரை நீக்குவதற்கு முன்பு வரை, பா.ஜ.க.,வுடன் அன்பான உறவுக்கான தனது விருப்பத்தை ஒருபோதும் மறைக்கவில்லை. ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, அ.தி.மு.க.,வை பல்வேறு கோஷ்டிகள் வெவ்வேறு திசைகளில் இழுத்தபோது, ​​​​இ.பி.எஸ் மற்றும் ஓ.பி.எஸ் இருவரையும் மகிழ்ச்சியாக வைத்திருக்கும் வகையில் அதிகாரப் பங்கீட்டில் பா.ஜ.க களமிறங்கியது.

ஓ.பி.எஸ் போலல்லாமல், இ.பி.எஸ் ஒருபோதும் பா.ஜ.க.,வை வரவேற்கவில்லை. 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக “இந்துக்களை ஒருங்கிணைக்க” மாநிலத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்காக பல தேர்தல் பேரணிகளை நடத்துவதற்கான பா.ஜ.க முன்மொழிவுக்கு அனுமதி மறுக்கப்பட்டதில் இ.பி.எஸ் தலைமையிலான அரசாங்கத்தின் பங்கு இருப்பதாகக் காணப்பட்டது. பின்னர், இ.பி.எஸ்ஸுக்கு நெருக்கமான அதிமுக தலைவர்கள் தேர்தல் தோல்விக்கு பா.ஜ.க தான் காரணம் என்று பகிரங்கமாக குற்றம் சாட்டினர்.

எவ்வாறாயினும், இ.பி.எஸ்-க்கு உள்ள நிர்பந்தங்களை பா.ஜ.க புரிந்துகொள்கிறது என்று பா.ஜ.க எம்.பி ஒருவர் கூறினார். “துணை தேசியவாதத்தைத் தூண்டுவதற்கும், கூட்டாட்சி பிரச்சினைகளில் மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் சாம்பியனாக தன்னை முன்னிறுத்துவதற்கும் என தி.மு.க ஓவ்வொரு பிரச்சினையாக எடுத்துக்கொண்டிருக்கும் நேரத்தில், இ.பி.எஸ் கடுமையாக போராட வேண்டியிருந்தது. பா.ஜ.க தலைமை இந்த உண்மைகளை உணர்ந்துள்ளது,” என்று அந்த பா.ஜ.க எம்.பி கூறினார்.

இரண்டு அ.தி.மு.க தலைவர்களுக்கு இடையே நடுநிலையாக தன்னை காட்டிக் கொள்வதில் பா.ஜ.க விழிப்புடன் இருப்பதாக அந்த பா.ஜ.க எம்.பி கூறினார். “இரு தரப்பும் சண்டையிட்டபோது நாங்கள் நடுநிலை வகித்தோம். கொள்கை விஷயங்களில் பா.ஜ.க தலைமையை ஓ.பி.எஸ் பலமுறை அணுகியும் பா.ஜ.க மத்திய தலைமையோ அல்லது அரசோ ஆதரவளிக்கவில்லை. பா.ஜ.க நிபந்தனையின்றி அவரை ஆதரித்திருந்தால், அவர் இப்போது இவ்வளவு பலவீனமாக இருந்திருக்க மாட்டார், ”என்று தலைவர் கூறினார்.

தமிழ்நாட்டின் தனித்துவமான ஒற்றையாட்சி எதிர்ப்பு அரசியல் நிலப்பரப்பை பா.ஜ.க தேசிய தலைமை நன்கு அறிந்திருப்பதாகவும், இது அரசியல் இயக்கங்கள் மற்றும் வலிமையான தலைவர்களை உருவாக்குவதாகவும் பா.ஜ.க தலைவர்கள் தெரிவித்தனர். அண்டை மாநிலத்தைச் சேர்ந்த பா.ஜ.க எம்.பி, “பாஜகவுக்கு (தமிழகத்தில்) இழப்பதற்கு எதுவும் இல்லை. எந்த வளர்ச்சியும் நல்ல செய்தியாக இருக்கும். எனவே மாநிலத்தில் ஒரு இளம் தலைவர் (கே அண்ணாமலை) மற்றும் ஆக்ரோஷமான பிரச்சாரத்தில் இருப்பதால், பா.ஜ.க வளர்ச்சி அதிகரித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை,” என்று கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.