குஜராத்தில் கனமழை – 7 பேர் பலியான சோகம்!

கடந்த இரண்டு நாட்களாக குஜராத் முழுவதிலும் பெரும் வெள்ளம் ஏற்ப்பட்டுள்ளது. இதனால் நகரங்கள் முழுதும் பெரும் வெள்ளக்காடாகவே காட்சியளிக்கிறது. கடந்த ஞாயிற்று கிழமை குஜராத்தின் தலைநகரான அகமதாபாத்தில் 219 மி.மீ வரை மழை பதிவாகியுள்ளது. இதன் காரணமாக பள்ளி, கல்லூரிகள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளதால் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

அதே போல் பல்வேறு குடியிறுப்புகளும் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. இதனால் ஏற்ப்பட்ட இடிபாடுகளால் கடந்த 24 மணி நேரத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். ஜூன் 1ஆம் தேதி முதல் தற்போது நிலவரப்படி மாநிலம் முழுவதும் சுமார் 63 பேர் வரை உயிரிழந்துள்ளனர் என மாநில பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ராஜேந்திர திரிவேதி கூறியுள்ளார்.

தெற்கு குஜராத் பகுதியில் உள்ள டாங் நவ்சாரி, தபி மற்றும் வல்சாத் மாவட்டங்களும் மத்திய குஜராத் பகுதியில் பஞ்சமஹால், சோட்டா உதேபூர் மற்றும் கெடா மாவட்டங்களும் கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள. பாதுகாப்பிற்காக தற்போது வரை 9,000 பேர் பாதுகாப்பான இடத்திற்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்.

வெள்ளத்தில் சிக்கித் தவித்த 468 பேர் மீட்கப்பட்டுள்ளனர். வெள்ளப் பாதுகாப்பிற்கான அனைத்து தேவைகளையும் செய்து கொடுப்பதாக பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதியளித்துள்ளனர்.

வெள்ளப் பாதிப்பை மேலும் எதிர்கொள்ள பேரிடர் மீட்புப் படை மற்றும் தேசிய மீட்புப் படையினர் தயாராக உள்ளதாக அமித்ஷா தெரிவித்தார். இதனிடையில் வெள்ளத்தில் சிக்கி இருந்த 16பேரை இந்திய கடற்படையினர் வான்வழியாக மீட்டுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.