குமாரசாமிக்கு கொரோனாவீட்டு தனிமையில் சிகிச்சைகுமாரசாமிக்கு கொரோனா: வீட்டு தனிமையில் சிகிச்சை| Dinamalar

பிடதி : ம.ஜ.த.,வை சேர்ந்த முன்னாள் முதல்வர் குமாரசாமிக்கு, கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சை பெறுகிறார்.ம.ஜ.த.,வை சேர்ந்த முன்னாள் முதல்வர் குமாரசாமிக்கு நேற்று முன்தினம் இரவு திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. உடல் வலி, சளியும் இருந்தது.அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று பாதிப்பு உறுதியானது.

தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சை பெற்றுக் கொள்ளும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.இதனால், ராம்நகர் மாவட்டம், பிடதியில் உள்ள பண்ணை வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டுள்ளார். பத்து நாட்களுக்கு வீட்டிலேயே இருந்து சிகிச்சை பெறுவதாக தெரிவித்துள்ளார்.மேலும், சமீபத்தில் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தவறாமல் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளும்படியும்; தன்னை சந்திக்க யாரும் வர வேண்டாம் என்றும் அவர் கேட்டுகொண்டுள்ளார்.கடந்த இரண்டு நாட்களுக்கு முன் தான், தேசிய ஜனநாயக கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் திரவுபதி முர்மு இவரை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.