தண்டவாளத்தில் சிக்கிய கிரேன் ரயில் போக்குவரத்து பாதிப்பு| Dinamalar

பாலக்காடு அருகே ரயில் தண்டவாளத்தில் கிரேன் சிக்கியதால், ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், ஒற்றப்பாலம் மான்னனுாரில் ரயில்வே மேம்பாலம் கட்டுமான பணி நடந்து வருகிறது. இதற்காக வந்த கிரேன், நேற்று திடீரென பழுதடைந்ததால் தண்டவாளத்தில் சிக்கிக் கொண்டது. இதனால், ஒற்றப்பாலம்- – பாலக்காடு வழித்தடத்தில், ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பல ரயில்களின் இயக்கம் தாமதமானது. ஒரே டிராக் வாயிலாக ரயில்களை அனுப்பி, போக்குவரத்தை சீரமைத்தனர். மாலை 4 மணி அளவில், இரு கிரேன்களை வரவழைத்து, பழுதடைந்த கிரேனை, தண்டவாளத்தில் இருந்து தொழிலாளர்கள் அகற்றினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.