நியூயார்க்கில் தொடங்கும் அமெரிக்க ஓபன் டென்னிசில் ஜோகோவிச் களம் காணுவாரா?

பெல்கிரேடு,

சமீபத்தில் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் 7-வது முறையாக மகுடம் சூடிய செர்பியா வீரர் நோவக் ஜோகோவிச் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 29-ந்தேதி நியூயார்க்கில் தொடங்கும் அமெரிக்க ஓபன் டென்னிசில் களம் காணுவாரா? என்பதில் சந்தேகம் நிலவுகிறது.

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள தொடர்ந்து மறுத்து வரும் ஜோகோவிச், ‘தற்போதைய சூழலில் நான் ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவுக்கு (கொரோனா தடுப்பூசி போட்டால் தான் இந்த நாடுகளுக்குள் நுழைய முடியும்) செல்ல முடியாது. ஆனால் அமெரிக்க ஓபனில் விளையாட வேண்டும் என்பதில் ஆர்வமுடன் காத்திருக்கிறேன்.

அங்கிருந்து நல்ல தகவல்கள் வரும் என்று நம்புகிறேன். அப்படி நடக்காவிட்டாலும் கூட கவலையில்லை’ என்றார். இந்த ஆண்டு தொடக்கத்தில் ஆஸ்திரேலிய ஓபனில் கலந்து கொள்ள அங்கு சென்ற ஜோகோவிச், கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளாததால் நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.