பள்ளிக்கு சென்ற மாணவியை வழிமறித்து பிளேடால் கிழித்த மர்ம நபர்கள்; என்ன நடந்தது?

சேலம் மாவட்டத்தை சேர்ந்த மாணவி அவர். அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து வருகிறார். நேற்று வழக்கம்போல் வீட்டிலிருந்து பள்ளிக்கு தனது நண்பர்களுடன் நடந்து சென்றுகொண்டிருந்தபோது, அவருக்குப் பின்னே முகத்தில் கர்சீஃப் கட்டிக்கொண்டு பைக்கில் வந்த மர்ம நபர்கள் இரண்டு பேர் மாணவியை வழிமறித்துள்ளனர்.

Violence against women (Representational Image)

அதற்கு மாணவி கொஞ்சமும் செவி சாய்க்காமல் அவர்களைக் கடந்து சென்றதால், பைக்கில் இருந்து இறங்கிய ஒரு நபர், மாணவியிடம் நீண்ட நேரமாக வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுள்ளார்.

அப்போது தீடீரென தனது கையில் வைத்திருந்த பிளேடை கொண்டு மாணவியின் முகத்தில் கிழித்துவிட்டு, இருவரும் இருசக்கர வாகனத்தில் தப்பியோடியுள்ளனர். இதில் ரத்த வெள்ளத்தில் கிடந்த மாணவியை அக்கம் பக்கத்தினர் மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கொலை

பின்னர் மாணவியின் பெற்றோருக்குத் தகவல் அளிக்கப்பட்டு, காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார், மாணவியை கொலை செய்ய முற்பட்ட மர்ம நபர்களை வலைவிரித்து தேடி வருகின்றனர்.

மேலும் மாணவியிடம் சம்பந்தப்பட்ட நபர்கள் குறித்து விசாரணை செய்து வருகின்றனர். அதன்மூலம் மாணவிக்கும் சம்பந்தப்பட்ட மர்ம நபர்களுக்கும் முன் விரோதம் ஏதும் உள்ளதா, அல்லது வேறு ஏதும் ஆதாயத்திற்காக இதுபோன்ற செயல்களில் ஈடுப்பட்டுள்ளனரா என்று விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

Violence Against Women (Representational Image)

இதுகுறித்து காவல்துறை வட்டாரங்களில் விசாரித்தோம். “மாணவியின் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை. மாணவி நன்றாக இருக்கிறார். அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பந்தப்பட்ட மர்ம நபர்கள் குறித்து மாணவியின் நண்பர்கள், பள்ளிகளில் விசாரணை செய்து வருகிறோம்’’ என்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.