பொள்ளாச்சி: அரசுப்பள்ளி ஆசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து 44 சவரன் நகை கொள்ளை

பொள்ளாச்சி அருகே அரசுப் பள்ளி ஆசிரியர் வீட்டில் 44.5 சவரன் நகை மற்றும் 20 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. 3 தனிப்படை அமைத்து போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பொள்ளாச்சி அருகே உள்ள கோவை ரோடு நஞ்சேகவுண்டன்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் சரவணகுமார் (49). இவர் பழனியில் உள்ள அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஜெயசித்ரா (48), ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர்களது, மகளின் பூப்பு நீராட்டு விழா நிகழ்ச்சிக்காக சொந்த ஊரான பழனிக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை 10 ஆம் தேதி குடும்பத்துடன் சென்றனர்.
image
இந்நிலையில், திங்கட்கிழமை காலை வீட்டில் பணியாற்றிக் கொண்டிருந்த காவலர் வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு சரவணகுமார் மற்றும் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். தகவலை அடுத்து ஊர் திரும்பிய சரவணகுமார் மற்றும் குடும்பத்தினர், வீட்டினுள் சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த 44.5 சவரன் தங்க நகைகள் மற்றும் சுமார் 20 லட்சம் பணம் கொள்ளை போனது தெரியவந்தது.
image
இதையடுத்து சரவணகுமாரின் மனைவி ஜெயசித்ரா கொடுத்த புகாரின் பேரில், வடக்கிபாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில், தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் சாந்தி தலைமையில் 3 தனிப் படைகள் அமைத்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.