மனு கொடுக்க வந்த பெண்ணை அடித்த திமுக அமைச்சர்.. வெடிக்கும் சர்ச்சை.. 48 மணி நேரத்தில் பதவி விலக வேண்டும்.!!

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பாலவனத்தம் கிராமத்தில் மனு கொடுக்க வந்த தொகுதி பெண்ணை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் பேப்பரால் அடித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இதனை பாஜக தலைவர் அண்ணாமலை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

அண்ணாமலை திமுக அமைச்சர்கள் மீது ஊழல் உள்ளிட்ட புகார்களை கூறி வருகிறார். மேலும் அமைச்சர் செந்தில் பாலாஜி ஊழல் பட்டியில் முதலிடத்தில் இருப்பதாகவும், அவர் விரைவில் கைது செய்யப்படுவார் எனவும் தெரிவித்து வருகிறார். அண்மையில் ஊட்டச்சத்து பவுடர் தொடர்பாக டென்டரில் முறைகேடு இருப்பதாக அமைச்சர் மா சுப்பிரமணியனை மீது குற்றம் சாட்டினார். 

இந்நிலையில், அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் தொகுதி பெண்ணை பேப்பரால் அடித்த வீடியோவை பகிர்ந்துள்ளார். இது குறித்து தனது விட்டார் பக்கத்தில், மக்கள் என்ன உங்கள் அடிமைகளா? விருதுநகர்,பாலவனத்தம் கிராமத்தில் தீர்வு தேடி வந்த ஏழைத்தாயை அடித்த திமுக அமைச்சர் KKSSR ராமச்சந்திரன் அடுத்த 48 மணி நேரத்திற்குள் அமைச்சர்  பதவி விலக வேண்டும் அல்லது அவரது வீட்டை தமிழக பாஜக முற்றுகையிடும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம் என பதிவிட்டுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.