13/07/2022: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 16906 பேருக்கு கொரோனா பாதிப்பு, 45 பேர் பலி…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் புதிதாக 16, 906 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளதுடன்  45 பேர் பலியாகி உள்ளனர். நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 4 கோடியை தாண்டி உள்ளது.

மத்திய சுகாதார அமைச்சகம்  இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் பதிவாகி உள்ள கொரோனா பாதிப்பு குறித்த தகவல்களை வெளியிட்டு உள்ளது. அதன்படி, நேற்று ஒரே நாளில், புதிதாக மேலும்,  16,906 பேர் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,36,69,850ஆக உயர்ந்துள்ளது.தினசரி பாதிப்பி விகிதிம் 3.68 சதவிகிதமாக உள்ளது.

கடந்த 24மணி நேரத்தில் சிகிச்சை பலனின்றி கொரோனா நோயாளிகள் மேலும்  45 பேர் இறந்துள்ளனர். இதன் மூலம் நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,25,519-ஆக உயர்ந்தது. உயிரிழந்தோர் விகிதம் 1.20% ஆக உள்ளது.

கடந்த 24மணி நேரத்தில் கொரோனா தொற்றில் இருந்து  15,447 -பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4,30,11,874 -ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் குணமடைந்தோர் விகிதம் 98.50% ஆக உயர்ந்துள்ளது.

தற்போதைய நிலையில் நாடு முழுவதும் 1,32,457 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.  சிகிச்சை பெறுவோர் விகிதம் 0.30% ஆக குறைந்துள்ளது.

இந்தியாவில் இதுவரை 1,99,12,79,010 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 11,15,068 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.