500 நகரங்களில் கியூட் தேர்வு| Dinamalar

புது டில்லி: “பொது பல்கலை நுழைவுக்கான ‘கியூட்’ தேர்வு விண்ணப்பதாரர்களில் 98 சதவீதம் பேருக்கு விரும்பும் தேர்வு மையம் கிடைக்கும்,” என, யூ.ஜி.சி., எனப்படும் பல்கலை மானியக் குழு தலைவர் ஜெகதீஷ் குமார் கூறினார்.

இதுகுறித்து, அவர் கூறியதாவது: பொதுப் பல்கலை நுழைவுக்கான கியூட் தேர்வு நாடு முழுதும் 500 நகரங்களில், ஜூலை 17ம் தேதி முதல் ஆக., 10 வரை நடக்கிறது. இந்த தேர்வுக்கு 14 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். இதற்கான ‘ஹால் டிக்கெட்’ நேற்று வெளியிடப்பட்டது. இதில் 98 சதவீதம் பேருக்கு அவர்கள் விரும்பிய தேர்வு மையமே கிடைக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.