இரவில் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் – நீலகிரி மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

தொடர் மழை காரணமாக இரவு நேரங்களில் யாரும் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என்று நீலகிரி மாவட்ட காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

தொடர் மழை காரணமாக  கூடலூர் பகுதிக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், இன்னும் சில தினங்கள் மாவட்டத்தில் மழைப் பெய்ய வாய்ப்புள்ளது. எனவே இரவு நேரங்களில் யாரும் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என்றும், பகல் நேரங்களில் தேவையில்லாமல் வெளியில் வர வேண்டாம்  என்றும் காற்றின் தாக்கம் இருக்கும் என்பதால் மரங்கள் தடுப்பு சுவர்கள் அருகில் நிற்க வேண்டாம் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்

image
மேலும் மரங்கள் சாய்ந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டாலோ பிற பேரிடர் சம்பவங்கள் ஏற்பட்டாலோ 0423. 22223828  அல்லது 97898 00100 என்ற அவசர கால எண்ணில் தொடர்பு கொள்ள அறிக்கையில்  கூறப்பட்டுள்ளது.

இதையும் படிக்கலாம்: தமிழகத்தில் 2 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.