கேரளாவில் ஒருவருக்கு குரங்கு அம்மை அறிகுறி| Dinamalar

திருவனந்தபுரம்: கேரளாவில் ஒருவருக்கு குரங்கு அம்மை அறிகுறி தென்படுவதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறியுள்ளார்.இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், பாதிக்கப்பட்ட நபர் ஐக்கிய அரபு எமீரேட்சில் இருந்து வந்துள்ளார். அங்கு குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்ட நபருடன் தொடர்பில் இருந்துள்ளார். அவரது மாதிரிகள் புனேயில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. முடிவு வந்த பிறகு தான் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டுள்ளாரா என்பது உறுதியாகும் என்றார்.தற்போது, உலகளவில் 60க்கும் மேற்பட்ட நாடுகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.