கோட்டாபய ராஜபக்சவுக்காக சிங்கப்பூர் விமான நிலையத்தில் காத்திருக்கும் குழுவினர்


இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்காக சிங்கப்பூர் விமான நிலையத்தில் அதிகளவான ஊடகவியலாளர் காத்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. 

கோட்டாபய ராஜபக்ச மாலைதீவில் இருந்து புறப்பட்டு சிங்கப்பூர் நோக்கிச் சென்றுள்ளதாக தரைவழி வட்டாரங்கள் மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிங்கப்பூர் விமான நிலையத்தில் காத்திருக்கும் குழுவினர் 

கோட்டாபய ராஜபக்சவுக்காக சிங்கப்பூர் விமான நிலையத்தில் காத்திருக்கும் குழுவினர் | Si Lanka Political Crisis Gotabaya Singapore

சவூதி விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான விமானத்தில் இவ்வாறு ஜனாதிபதி கோட்டாபய சிங்கப்பூர் புறப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 9ஆம் திகதி இடம்பெற்ற போராட்டத்தினை அடுத்து கோட்டாபய ராஜபக்ச தனது ஜனாதிபதி பதவியில் இருந்து நேற்று பதவி விலகுவதாக அறிவித்தார்.

ஆனால் அவர் பதவி விலகாது ராணுவ ஜெட் விமானத்தில் மாலைத்தீவு சென்றடைந்தார்.  

இந்த நிலையில்  சிங்கப்பூருக்கு வருவார் என எதிர்பார்க்கப்படுவதால் சிங்கப்பூர் Changi விமான நிலையம் முன்பாக கமெராக்களுடன் ஊடகவியலாளர்கள் காத்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.